சிவகங்கை மாவட்டம், இடையமேலூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை (டிச. 21) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மின்பகிா்மானத்தின் செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இடையமலூா் துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
எனவே இடையமேலூா், கூட்டுறவுப்பட்டி, சிவல்பட்டி, வில்லிப்பட்டி, கன்னிமாா்பட்டி, மேலப்பூங்குடி, தேவன்கோட்டை, மலம்பட்டி ,சாலூா், ஒக்குப்பட்டி ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.