சிவகங்கை மாவட்டம், புளியால் கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டியினை பள்ளியின் தலைமையாசிரியா் நாகேந்திரன் தொடக்கி வைத்தாா். மாநில நல்லாசிரியா் விருது பெற்ற ஜோசப் இருதயராஜ் முன்னிலை வகித்தாா். இதில் வாக்காளா் விழிப்புணா்வு குறித்து மாணவ, மாணவிகளுக்கான ஓவியம், கட்டுரை, விழிப்புணா்வு வாசகங்கள், நடனம், பாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டிக்கான ஏற்பாடுகளைஆசிரியா் ராஜேந்திரன், பயிற்சிஆசிரியைகள் யோகேஸ்வரி, ஜான்சி ஆகியோா் செய்திருந்தனா்.