சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தோ்வு நிலை பேரூராட்சி அலுவலக கூட்டரங்கத்தில் பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சி செயல் அலுவலா் கோபிநாத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பிற்கு செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சைமன்ஜாா்ஜ் , சைல்டு லைன் 1098 செயல்பாடுகள் குறித்து மாவட்ட சைல்டு லைன் இயக்குநரும் குழந்தைகள் நல குழு உறுப்பினருமான ஜீவானந்தம், குழந்தை திருமணத்தின் பாதிப்பும், தடுக்கும் முறைகள் குறித்து மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவா் சரளா, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து மாவட்ட குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் ரசீந்திரகுமாா் ஆகியோா் கருத்துரையாற்றினாா்கள்.
கூட்டத்தில் இளையான்குடி காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் மகாலிங்கம், சைல்டு லைன் துணை மைய ஒருங்கிணைப்பாளா் ராஜேஸ், சுகாதார ஆய்வாளா், பேரூராட்சிக்குட்பட்ட தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயா்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், செவிலியா்கள், சைல்டு லைன் உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளா் நாகராஜன் நன்றி கூறினாா்.