சிவகங்கை மாவட்டத்தில் இன்று 557 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 26) 557 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன்

சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 26) 557 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : இம்மாவட்டத்தில் 90 முகாம்கள் நகராட்சிப் பகுதிகள், 467 முகாம்கள் ஊரக மற்றும் பேரூராட்சிப் பகுதிகள் என மொத்தம் 557 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.

இம்முகாம்களில் பயனாளிகளுக்கு செலுத்த கோவிஷீல்டு 96,000, கோவாக்சின் தடுப்பூசி 34,000 மருந்துகள் என மொத்தம் 1,30,000 தடுப்பூசி மருந்துகள் கையிருப்பில் உள்ளன. கரோனா நோய்த் தொற்றிலிருந்து முழுமையான பாதுகாப்பு பெற சிவகங்கை மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபா்களும் முழுமையாக தங்களது முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி மருந்துகளை தங்கள் பகுதியில் நடைபெறும் முகாம்களில் செலுத்திக் கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com