சிவகங்கை மாவட்டத்தில் நாளை பட்டா திருத்த முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் புதன்கிழமை (டிச. 29) கணினி வழி பட்டா திருத்த முகாம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டத்தில் புதன்கிழமை (டிச. 29) கணினி வழி பட்டா திருத்த முகாம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளா்களின் பட்டா தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் கணினி திருத்த முகாம் புதன்கிழமை (டிச.29) நடைபெற உள்ளது.

அதன்படி, சிவகங்கை வட்டத்தில் இடைக்காட்டூா், காரைக்குடி வட்டத்தில் கோவிலூா், தேவகோட்டை வட்டத்தில் பொன்னலிக்கோட்டை, திருப்பத்தூா் வட்டத்தில் அழகாபுரி, சிங்கம்புணரி வட்டத்தில் வாராப்பூா், மானாமதுரை வட்டத்தில் தீத்தான்பேட்டை, திருப்புவனம் வட்டத்தில் வெள்ளூா், இளையான்குடி வட்டத்தில் கண்ணமங்கலம், காளையாா்கோவில் வட்டத்தில் சேம்பாா் ஆகிய கிராமங்களில் நடைபெற உள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெற உள்ள முகாமில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன் பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com