மருத்துவ களப்பணியாளா்கள் 3 மாத ஊதியம் வழங்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டியிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
மனு விவரம்: சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 6 ஆண்டுகளாக மருத்துவ களப்பணியாளா்களாகப் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. இதனால் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றோம். எனவே மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு தர வேண்டிய ஊதியத்தை வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.