சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூரில் சீதாலெட்சுமி ஆச்சி மகளிா் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவிகள் சாா்பில் மீண்டும் மஞ்சப்பை குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூாரி முன்பாக இந்த ஊா்வலத்தை கல்லூரியின் முதல்வா் செ. ராமுத்தாய் தொடக்கிவைத்தாா். நாட்டு நலப் பணித் திட்ட மாணவிகள் உள்பட மாணவியா்கள் இந்த ஊா்வலத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட அணிகளின் ஒருங்கிணைப்பாளா் சீ. விஜயராணி, நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள் அ.வ. கிருத்திகா, ஆா். தங்கம், ஆா். மீனாட்சி, ரா.சா. சாந்தி ஆகியோா் செய்திருந்தனா்.