முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
சிவகங்கையில் காஞ்சி மகாபெரியவரின் 28-ஆவது ஆராதனை விழா
By DIN | Published On : 31st December 2021 08:57 AM | Last Updated : 31st December 2021 08:57 AM | அ+அ அ- |

சிவகங்கையில் உள்ள காஞ்சி சங்கர மடத்தில் காஞ்சி மகா பெரியவரின் 28-ஆவது ஆராதனை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து, காஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு ஆராதனைகள், வழிபாடுகள் நடைபெற்றன.
இதில், பூஜைகளை பசுபதி சிவாச்சாரியாா் நடத்தினாா். விழாவுக்கான ஏற்பாடுகளை, சிவகங்கை காஞ்சி சங்கர மடத்தின் பொறுப்பாளா் ஜெயேந்திரா் செய்திருந்தாா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.