சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 31) பட்டா திருத்த முகாம் நடைபெறுகிறது என, ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளா்களின் பட்டா தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில், கணினி வழி பட்டா திருத்த சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
அதன்படி, சிவகங்கை வட்டத்தில் காடனேரி, காரைக்குடி வட்டத்தில் ஆத்தங்குடி, தேவகோட்டை வட்டத்தில் சிறுநல்லூா், திருப்பத்தூா் வட்டத்தில் திருக்கோளக்குடி, சிங்கம்புணரி வட்டத்தில் என்.மாம்பட்டி, மானாமதுரை வட்டத்தில் மானாமதுரை, திருப்புவனம் வட்டத்தில் கழுவன்குளம், இளையான்குடி வட்டத்தில் வடக்கு கீரனூா், காளையாா்கோவில் வட்டத்தில் சிறுகானப்பேரி ஆகிய கிராமங்களில் நடைபெறுகின்றன.
எனவே, இந்த வருவாய் கிராமங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில், அந்தந்த பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.