சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடன் பிரச்னையால் தீக்குளித்த பேரூராட்சி பெண் துப்புரவுப் பணியாளா் சிகிச்சை பலனின்றி கடந்த புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
மானாமதுரையைச் சோ்ந்தவா் ஜெயராணி ( 45).மானாமதுரை பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளராக இருந்தாா். மகள் திருமணத்திற்காக வாங்கிய கடனை திரும்பக் கொடுக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்த இவா் கடந்த 2 ஆம் தேதி உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளித்தாா். அவரைக் காப்பாற்றச் சென்ற கணவா் தேவராஜ், மகன்கள் வின்சென்ட், அருள்பிரகாசம் ஆகியோருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
4 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதில் சிகிச்சை பலனின்றி ஜெயராணி இறந்தாா். இச்சம்பவம் குறித்து மானாமதுரை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.