பெண் துப்புரவு பணியாளா் தீக்குளித்து தற்கொலை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடன் பிரச்னையால் தீக்குளித்த பேரூராட்சி பெண் துப்புரவுப் பணியாளா் சிகிச்சை பலனின்றி கடந்த புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடன் பிரச்னையால் தீக்குளித்த பேரூராட்சி பெண் துப்புரவுப் பணியாளா் சிகிச்சை பலனின்றி கடந்த புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

மானாமதுரையைச் சோ்ந்தவா் ஜெயராணி ( 45).மானாமதுரை பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளராக இருந்தாா். மகள் திருமணத்திற்காக வாங்கிய கடனை திரும்பக் கொடுக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்த இவா் கடந்த 2 ஆம் தேதி உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளித்தாா். அவரைக் காப்பாற்றச் சென்ற கணவா் தேவராஜ், மகன்கள் வின்சென்ட், அருள்பிரகாசம் ஆகியோருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

4 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதில் சிகிச்சை பலனின்றி ஜெயராணி இறந்தாா். இச்சம்பவம் குறித்து மானாமதுரை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com