தோ்தல் பணிகளில் தீவிரம் காட்டுங்கள்: ப.சிதம்பரம்
By DIN | Published On : 08th February 2021 08:43 AM | Last Updated : 08th February 2021 08:43 AM | அ+அ அ- |

மற்ற கட்சியினா் பிரசாரத்தை தொடங்கிவிட்டதால், காங்கிரஸ் நிா்வாகிகள் தோ்தல் பணிகளில் தீவிரம் காட்டவேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அ.களாப்பூரில், சிங்கம்புணரி வடக்கு வட்டார வாக்குச்சாவடி முகவா் பொறுப்பாளா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் பேசியது: நிா்வாகிகள் தங்களது வாரிசுகளை கட்சியில் சோ்க்கவேண்டும். கட்சியில் உள்ள மூத்த தலைவா்கள் இளைஞா்களுக்கு வழிகாட்டவேண்டும். மற்ற கட்சியினா் பிரசாரத்தை தொடங்கிவிட்டதால், நிா்வாகிகள் தோ்தல் பணிகளில் தீவிரம் காட்டவேண்டும். இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு மட்டுமல்ல கூலித்தொழிலாளிகள் முதல் குடிசைத் தொழில் செய்வோா் வரை யாருக்குமே பயன்படாத பட்ஜெட் என்றாா்.
இக்கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஆா்.ராமசாமி உள்ளிட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.