சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், பிப்ரவரி 19 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெற உள்ளதாக, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சி.கே. சா்மிளா(விவசாயம்) தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டமானது, ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொள்ள உள்ளனா். எனவே, சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்று, கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி மனு அளிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.