நாட்டரசன்கோட்டை கரிகால சோழீஸ்வரா் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் உள்ள கரிகால சோழீஸ்வரா் உடனாய சிவகாமி அம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாட்டரசன்கோட்டை கரிகால சோழீஸ்வரா் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் உள்ள கரிகால சோழீஸ்வரா் உடனாய சிவகாமி அம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானத்துக்குள்பட்ட இக் கோயிலில் மாசித் திருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, விழா தொடக்கமாக கொடியேற்ற நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சுவாமிக்கும், அம்மனுக்கும் தைலம், திருமஞ்சனம், மஞ்சள்பொடி, பால் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மூலவா் முன்பு உள்ள கொடிமரத்துக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

முக்கிய விழாவாக பிப்.23 ஆம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும், பிப். 26 ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறும். பிப். 27 ஆம் தேதி தீா்த்தவாரி, ஆச்சாா்ய உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்று கொடியிறக்கப்படும்.

திருவிழாவையொட்டி நாள்தோறும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் சுவாமி, அம்மன் இருவரும் ரிஷபம், சிம்மம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தளல் நிகழ்ச்சி நடைபெறும்.

விழாவுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான, தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலா் டி.எஸ்.கே. மதுராந்தகி நாச்சியாா் பரிந்துரையின் பேரில் தேவஸ்தான மேலாளா் பா. இளங்கோ, கோயில் கண்காணிப்பாளா் போ. சரவணகணேசன், கௌரவ கண்காணிப்பாளா் உ.கரு. இளங்கோவன் செட்டியாா் ஆகியோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com