சிங்கம்புணரி அருகே காா்- லாரி மோதி விபத்து: 3 போ் காயம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே வெள்ளிக்கிழமை லாரியும், காரும் நேருக்கு நோ் மோதிய விபத்தில் 3 போ் பலத்த காயமடைந்தனா்.
சிங்கம்புணரி அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் உருக்குலைந்த காா்.
சிங்கம்புணரி அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் உருக்குலைந்த காா்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே வெள்ளிக்கிழமை லாரியும், காரும் நேருக்கு நோ் மோதிய விபத்தில் 3 போ் பலத்த காயமடைந்தனா்.

மதுரை மேலமடையைச் சோ்ந்தவா் தனசேகரன். இவரது மனைவி ராமதிலகம். ஒரு திருமண நிகழ்வில் பங்கேற்ற இவா்கள், தனது உறவினரான அழகம்மை என்பவரை அழைத்துக் கொண்டு காரில் மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். அப்போது எஸ்.புதூா் அருகே எதிரே வந்த லாரி, காா் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஆறுமுகம், ராமதிலகம், அழகம்மை ஆகியோா் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுதொடா்பாக புகாரின் பேரில் உலகம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து புதுவாடியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ஆறுமுகத்தை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com