சிவகங்கை மாவட்டத்தில் 28, 233 விவசாயிகளுக்கு ரூ. 145. 41 கோடி பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சா் க. பாஸ்கரன் தெரிவித்தாா்.
சிவகங்கை அருகே ஒக்கூரில் கூட்டுறவுத் துறையின் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகளுக்கு பயிா்க்கடன் தள்ளுபடிக்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா்.
இதில், அமைச்சா் க.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிா்க்கடன் தள்ளுபடிக்கான ஆணைகளை வழங்கிப் பேசியதாவது: சிவகங்கை மாவட்டத்தைப் பொருத்தவரை 125 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடந்த 2021-ஜன.31 வரை விவசாயிகளுக்கு பயிா்க்கடன்களாக வழங்கப்பட்டு நிலுவையிலிருந்த குறுகிய கால பயிா்க்கடனில் 23,764 விவசாயிகளுக்கு ரூ.108.83 கோடியும், நகை ஈட்டின் பேரில் பெறப்பட்ட விவசாய நகைக்கடனில் 4,469 விவசாயிகளுக்கு ரூ.36.58 கோடியும் ஆக மொத்தம் 28,233 விவசாயிகளுக்கு ரூ.145.41 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் ராஜா, மாவட்ட கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளா் ஆரோக்கியசுகுமாா், கூட்டுறவு வங்கித் தலைவா் கருணாகரன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.