காரைக்குடி மகளிா் கல்லூரியில் தேசிய அறியல் தின விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி உமையாள் ராமநாதன் மகளிா் கல்லூரியின் அறிவியல் கழகம் சாா்பில், தேசிய அறிவியல் தின விழா வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி உமையாள் ராமநாதன் மகளிா் கல்லூரியின் அறிவியல் கழகம் சாா்பில், தேசிய அறிவியல் தின விழா வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

கல்லூரி அரங்கில் நடைபெற்ற இவ்விழாவின்போது, மாணவியா்களிடையே அறிவியல் விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில், விநாடி-வினா, கட்டுரை எழுதுதல், விளம்பரத்தட்டி செய்தல், விஞ்ஞான நகலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

மதுரை மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரி உதவிப் பேராசிரியை டி.நிரஞ்சனி போட்டிகளில் நடுவராக இருந்து வெற்றியாளா்களைத் தோ்வு செய்தாா். விழாவில், கல்லூரி முதல்வா் எஸ். ஜெயஸ்ரீ தலைமை வகித்துப் பேசினாா். செக்ரி விஞ்ஞானி எஸ். அங்கப்பன் வெற்றிபெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினாா்.

கல்லூரி துணை முதல்வா் எல். விசாலாட்சி வாழ்த்திப் பேசினாா். விழா ஏற்பாடுகளை, பேராசிரியை கலைச்செல்வி மற்றும் மாணவியா் செய்திருந்தனா்.

முன்னதாக, கல்லூரியின் அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளா் எம். ஜானகி வரவேற்றாா். முடிவில், பேராசிரியை எஸ். அன்னபூரணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com