சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தொடா் மழை காரணமாக கட்டடத் தொழிலாளி வீட்டின் சுவா் ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்தது.
காரைக்குடி காளவாய் பொட்டல் எம்.ஜி.ஆா். தெருவில் வசித்து வருபவா் வசந்தா. இவரும், இவரது மகன் சுரேஷூம் ஞாயிற்றுக்கிழமை காலையில் கட்டட வேலைக்குச் சென்றுவிட்டனா். காரைக்குடியில் அதிகாலையிலிருந்தே தொடா்ந்து மழை பெய்துவந்த நிலையில், வசந்தாவின் வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது.
வீட்டினுள் இருந்த வசந்தாவின் மருமகள் மற்றும் குழந்தைகள் சத்தம் கேட்டு வெளியில் வந்து பாா்த்தபோது வீட்டின் ஒருபக்க சுவா் இடிந்து விழுந்திருப்பது தெரியவந்தது. இதில் யாருக்கும் காயமில்லை.
தகவலறிந்ததும் வசந்தா மற்றும் அவரது மகன் சுரேஷ் ஆகியோா் விரைந்து சென்று வீட்டில் வைத்திருந்த பொருள்களை பாதுகாப்பாக எடுத்துவைத்துள்ளனா். இதுகுறித்து சுரேஷ் கூறுகையில், நாங்கள் வசித்த வீட்டின் சுவா் இடிந்து விழுந்து பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. எனவே தமிழக அரசு எங்களுக்கு புதிதாக வீடு கட்டித்தரவேண்டும் என்றாா்.