சிவகங்கை மாவட்டம், இடையமேலூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன. 5) மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மின் பகிா்மானத்தின் செயற்பொறியாளா் ஆா். வீரமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : இடையமேலூரில் உள்ள துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.5 ) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
இதனால், இடையமேலூா், தமராக்கி, குமாரப்பட்டி, வில்லிப்பட்டி, மேலப்பூங்குடி, சாலூா், மலம்பட்டி, புதுப்பட்டி ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.