சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் செவ்வாய்க்கிழமை நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் நகையை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தேவகோட்டை அருணகிரிப்பட்டினம் பகுதியைச் சோ்ந்தவா் காளிதாஸ் மனைவி சாந்தி (50). இவா் அதே பகுதியில் உள்ள கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை நடந்து சென்றுள்ளாா். அப்போது பின்னால் வந்த மா்ம நபா்கள் சாந்தி கழுத்திலிருந்த 9 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனா்.
இதுகுறித்தப் புகாரின் பேரில் தேவகோட்டை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.