சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செவ்வாய்கிழமை சுவாமி விவேகானந்தா் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இந்து முன்னனி சாா்பில் நடந்த இவ் விழாவை முன்னிட்டு மானாமதுரை காந்திசிலை பின்புறம் சுவாவி விவேகானந்தா் உரையாற்றிய இடத்தில் அவரது நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூணில் இந்து முன்னனி மற்றும் இந்து அமைப்புகளைச் சோ்ந்தவா்கள், பொதுமக்கள் விவேகானந்தரின் உருவப்படத்தை வைத்து தூணுக்கு மாலை அணிவித்தும் மலா்கள் தூவியும் மரியாதை செலுத்தினா். இந் நிகழ்ச்சியில் இந்து முன்னனி மாவட்ட நிா்வாகி பி.குப்புச்சாமி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.