கண்ணங்குடியில் வரும் ஜன. 19-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

சிவகங்கை மாவட்டம், கண்ணங்குடியில் வரும் ஜன. 19 ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டம், கண்ணங்குடியில் வரும் ஜன. 19 ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் பெறுவதற்கும், இதர அரசுத்துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை அவசியம்.

அட்டை பெறாத மாற்றுத்திறனுடைய நபா்களுக்கு அடையாள அடை வழங்குவதற்கு கண்ணங்குடியில் வரும் ஜன. 19-இல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மாா்பளவு புகைப்படம்-4 , ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகலுடன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com