திருப்பத்தூா் அருகே கம்பி வேலியில் சிக்கி புள்ளிமான் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.
இப்பகுதியில் உள்ள நாட்டாா்மங்கலம் சாலையில் புள்ளிமான் ஒன்று உயிரிழந்து கிடந்தது. விசாரணையில் இந்த மான் நாய்களால் துரத்தப்பட்டு கம்பி வேலியில் சிக்கி இறந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினா் அங்கு வந்து மானின் உடலை மீட்டு திருப்பத்தூா் வனத்துறை அலுவலக வளாக வனப்பகுதியில் உடற்கூறு ஆய்வு செய்து எரியூட்டினா்.
இதையடுத்து மான்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் அவை சாலையை கடக்காத வகையில் வனப்பகுதியில் வேலி அமைக்க கிராம மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனா்.