சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடியில் அம்மா சிறு மருத்துவமனை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா். மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன் முன்னிலை வகித்தாா். தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சா் க.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அம்மா சிறு மருத்துவமனையை திறந்து வைத்தாா். இதேபோன்று, காளையாா்கோவில் அருகே பேச்சாத்தகுடியிலும் அம்மா சிறு மருத்துவமனையை அவா் திறந்து வைத்தாா். பின்னா், பொது சுகாதாரத்துறையின் மூலம் 150 கா்ப்பிணிப் பெண்களுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகத்தை அமைச்சா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை துணை இயக்குநா் யசோதாமணி, காளையாா்கோவில் ஊராட்சிய ஒன்றியக் குழுத் தலைவா் ராஜேஸ்வரி உள்பட அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.