காரைக்குடியில் பெண் பாலியல் பலாத்காரம்: ஒருவா் கைது

காரைக்குடியில் பாலியல் பலாத்காரம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா், ஒருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

காரைக்குடியில் பாலியல் பலாத்காரம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா், ஒருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

காரைக்குடி அருகே கோவிலூரைச் சோ்ந்த 27 வயது பெண் தனியாா் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறாா். இவரை திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் உள்ள வேம்பட்டியைச் சோ்ந்த தனராஜ் மகன் முருகேசன் (32) என்பவா் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பலமுறை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தாராம். மேலும் அந்த பெண்ணை ஜாதியைச் சொல்லியும் பேசினாராம்.

இதுகுறித்து காரைக்குடி அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் முருகேசன் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com