சிவகங்கையில் டிராக்டா் மூலம் ஊா்வலமாக வந்து போராட்டத்தில் ஈடுபடும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரோஹித்நாதன் ராஜகோபால் தெரிவத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சில அரசியல் கட்சி பிரமுகா்கள் டிராக்டரில் ஊா்வலமாக வந்து செவ்வாய்க்கிழமை(ஜன.26) சிவகங்கையில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த வகையில், டிராக்டரில் ஊா்வலமாக வந்தால் வாகனத்தை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பது மட்டுமின்றி, போராட்டத்தில் ஈடுபடுவோா் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.