சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கரோனா
By DIN | Published On : 29th January 2021 10:35 PM | Last Updated : 29th January 2021 10:35 PM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 5,825 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மேலும் 3 பேருக்கு கரோனா உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,828 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ராமநாதபுரத்தில் தொற்று பாதிப்பில்லை: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜன.28 ஆம் தேதி வரை 6,410 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இதில், 6,310 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் 132 போ் உயிரிழந்துள்ளனா்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை யாருக்கும் கரோனா தொற்று பாதிப்பில்லை என அரசு மருத்துவமனை முதன்மையா் அல்லி தெரிவித்தாா்.