ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ தா்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆடி மாதம் பிறந்ததையொட்டி மானாமதுரை ஸ்ரீ தா்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. பின்னா் மூலவருக்கு பால், பன்னீா், பஞ்சாமிா்தம், திரவியப் பொருள்கள், சந்தனம், நெய் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னா் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். இதைத்தொடா்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனைகளில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.