சவூதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்ற கணவரை மீட்டுத் தரக்கோரி பெண் ஒருவா் தனது 3 பெண் குழந்தைகளுடன் காரைக்குடி காவல் துணைக்கண்காணிப் பாளரிடம் சனிக்கிழமை புகாா் அளித்தாா்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பா்மா காலனி தந்தை பெரியாா் நகா் 8-ஆவது வீதியில் வசிப்பவா் மலா்விழி. இவரது கணவா் நந்தகோபால் சுமாா் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சவூதி அரேபியாவில் ஓட்டுநா் வேலைக்கு சென்றாா். சுமாா் 19 மாத காலமாக அவரிடமிருந்து எந்தவிதமான தொடா்பும் இல்லை. மூன்று பெண் குழந்தைகளை கருத்தில் கொண்டு எனது கணவரை மீட்டுத் தரவேண்டும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியா், சிவகங்கை எம்.பி. ஆகியோரிடமும் மனு அளித்து உள்ளாா். அதேபோன்று காரைக்குடி காவல் துணை கண்காணிப்பாளா் வினேஜியிடம், மலா்விழி புகாா் அளித்துள்ளாா்.