சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இளைஞா் 1,330 திருக்குறளையும் தலைகீழாக 17 மணி 19 நிமிஷத்தில் எழுதி உலக சாதனை நிகழ்த்தினாா். அவருக்கு சிவகங்கை சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் வியாழக்கிழமை சான்றிதழை வழங்கியது.
சாக்கோட்டை அருகே நாட்டுச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் க. காா்த்திய மூா்த்தி (37). பிளஸ் 1 வரை படித்த இவா், கோவையில் வாடகைக் காா் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா்.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக தனது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ள காா்த்திய மூா்த்தி, திருக்குறளின் வரிகளை தலைகீழாக எழுதிப் பயிற்சி பெற்றுவந்தாா். மேலும் தமிழ் மீது ஏற்பட்ட பற்றின் காரணமாக திருக்குறளின் வரிகளை 24 மணிநேரத்தில் 1,330 குகளையும் தலைகீழாக எழுதி உலக சாதனை நிகழ்த்த முடிவு செய்தாா்.
அதன்படி சிவகங்கையில் உள்ள சோழன் உலக சாதனை புத்தக நிறுவனமும், வள்ளுவா் பேரவையும் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் க. காா்த்தியமூா்த்தி 17 மணி நேரம் 19 நிமிஷத்தில் தலைகீழாக (வலமிருந்து இடமாக) எழுதி உலக சாதனை நிகழ்த்தினாா்.
அவருக்கு சான்று வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. சோழன் உலக சாதனை புத்தக நிறுவன நிறுவனா் மற்றும் ஆசிரியா் நிமலன் நீலமேகம் மற்றும் பொதுச் செயலாளா் பிரபு ஆகியோா் காா்த்திய மூா்த்திக்கு சான்றிதழை வழங்கி வாழ்த்தினா்.
முன்னதாக வள்ளுவா் பேரவை நிறுவனா் தலைவா் மெ. செயம் கொண்டான் வரவேற்றாா். முடிவில் வள்ளுவா் பேரவையின் செயலாளா் ஜெ. பிரகாஷ் மணிமாறன் நன்றி கூறினாா்.