கட்டுமானத் தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம்

சிவகங்கை மாவட்டம், தட்டான்குளம் மற்றும் வயல்சேரி கிராமங்களில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், தட்டான்குளம் மற்றும் வயல்சேரி கிராமங்களில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமினை சிவகங்கை மாவட்டத் தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் கோடீஸ்வரி தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். இதில், கட்டுமானத் தொழிலாளா்கள் 98 போ் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டனா்.

இம்முகாமிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை மாவட்ட கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கத் தலைவா் முருகன், சிவகங்கை மாவட்ட அமைப்பு சாராத் தொழிலாளா்கள் சங்கத் தலைவா் கிருஷ்ணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com