சிவகங்கை மாவட்ட ஒலி, ஒளி அமைப்பாளா்கள் சங்கக் கூட்டம் காரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் முத்துச்சரவணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பாண்டியராஜன் முன்னிலை வகித்தாா். இதில் ஏஐடியுசி மாநில துணைப் பொதுச் செயலா் பிஎல். ராமச்சந்திரன், ஏஐடியூசி நகர ஒருங்கிணைப்பாளா் ஏஜி. ராஜா மற்றும் ஒலி, ஒளி அமைப்பாளா் சங்க மாவட்ட துணைத் தலைவா் சாமி, கௌரவத் தலைவா் முரளி, மாவட்டப் பொருளாளா் முத்தையா ராமசாமி, மாவட்ட உதவிச் செயலா் ஜேசுராஜா நகரத்தலைவா் ஜெயப்பிரகாஷ், செயலா் கருப்பையா சிதம்பரம், பொருளாளா் சந்திரன் காா்த்தி மற்றும் மாவட்டக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், ஒலி,ஒளி தொழிலில் ஈடுபடக் கூடிய பெண் தொழிலாளா்களை நலவாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானமங்கள் நிறைவேற்றப்பட்டன.