மருந்தாளுநா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருந்தாளுநா் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருந்தாளுநா் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் மருந்தாளுநா்கள் (15 பணியிடங்கள்) தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளனா்.

இப்பணியிடத்திற்கு மாத ஊதியம் ரூ.12,000 வழங்கப்படும். தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் 6 மாத காலத்திற்கு மட்டும் இப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்கள் வரும் காலங்களில் பணி வரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது.

பணியில் சேர விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தோா் உரிய கல்விச் சான்றிதழ்களுடன் சிவகங்கையில் உள்ள துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் நேரடியாகச் சென்று விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com