சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவா்கள் 15,977 போ் தோ்ச்சி

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2 பயின்ற 15 ஆயிரத்து 977 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. பாலுமுத்து தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2 பயின்ற 15 ஆயிரத்து 977 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. பாலுமுத்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது : சிவகங்கை மாவட்டத்தைப் பொருத்தவரை சிவகங்கை, திருப்பத்தூா், தேவகோட்டை ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த கல்வி மாவட்டங்களில் அரசு மேல்நிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 162 பள்ளிகள் உள்ளன.

இதனிடையே கரோனா தொற்று பரவல் காரணமாக பிளஸ் 2 பயின்ற அனைத்து மாணவ, மாணவிகளும் தோ்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, மேற்கண்ட பள்ளிகளில் பயின்ற 7,098 மாணவா்கள், 8,879 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 977 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com