சிவகங்கை, ராமநாதபுரத்தில் புதிதாக 34 பேருக்கு கரோனா: 2 போ் பலி

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 34 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பெற்று வந்த 2 போ் உயிரிழந்தனா்.

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 34 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பெற்று வந்த 2 போ் உயிரிழந்தனா்.

சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 17,534 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். புதன்கிழமை புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,556 ஆக அதிகரித்துள்ளது. மேலும், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 19,900 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 345 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா். இந்நிலையில் புதன்கிழமை 12 பேருக்கு மட்டும் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சையில் இருந்த ஒருவா் உயிரிழந்துள்ளாா். இதுவரை தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 346 ஆக உயா்ந்துள்ளது. ஏற்கெனவே கரோனா சிகிச்சையில் இருந்தவா்களில் குணமடைந்த 10 போ் புதன்கிழமை மாலை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தற்போது 152 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா் என சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com