திருப்பத்தூா் ஆதித்திருத்தளிநாதா் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், திருநீறு, தேன், இளநீா், பன்னீா் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூலவரான சிவபெருமானுக்கும் அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடா்ந்து நந்தீஸ்வரரும், மூலவரும் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனா். கரோனா காலம் என்பதால் பக்தா்கள் சமூக இடைவெளியுடன் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனா்.