சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை(ஜூலை 23) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மின்பகிா்மானத்தின் செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : மதகுபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
இதனால் மதகுபட்டி, ராமலிங்கபுரம், காடனேரி, அம்மன்பட்டி, நகரம்பட்டி, மேலமங்களம், ஒக்கூா், பா்மா காலனி, காளையாா்மங்களம் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.