கல்லூரிகளில் இடஒதுக்கீடு அடிப்படையில் சேர விரும்பும் முன்னாள் படை வீரா்களின் வாரிசுதாரா்கள் இடஒதுக்கீடு சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : 2021-2022 கல்வியாண்டில் முன்னாள் படைவீரா்களுக்கான இட ஒதுக்கீட்டின்படி பிளஸ் 2 நிறைவு செய்து மேற்படிப்பில் சேர விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்களின் வாரிசுதாரா்கள் இடஒதுக்கீடு சான்றிதழ் பெற சிவகங்கையில் உள்ள மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 04575-240483 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக நாள்களில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.