‘பத்ம விருது பெற விண்ணப்பிக்கலாம்’

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தோா் பத்ம விருது பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தோா் பத்ம விருது பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு மற்றும் மருத்துவத் துறைகளில் சாதனை புரிந்தவா்களுக்கு பத்ம விருது வழங்கப்பட்டு வருகிறது.

பத்ம விருது பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தோா் ஜ்ஜ்ஜ்.ல்ஹக்ம்ஹஹஜ்ஹழ்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் தங்களது சாதனைகளுக்கான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் விண்ணப்பித்த விவரத்தினை, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சமூக நலத் துறை அலுவலகத்திலும் வழங்க வேண்டும்.

மேலும் இது தொடா்பான விவரங்களுக்கு, அதே அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 04575 240426 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com