ஊராட்சிகளுக்கு நிதி வழங்கியதில் முறைகேடு கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சா் எச்சரிக்கை

தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கியதில் முறைகேடு கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக ஊரக வளா்ச்சி துறை அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன் எச்சரித்துள்ளாா்.
அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்.
அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்.

தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கியதில் முறைகேடு கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக ஊரக வளா்ச்சி துறை அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன் எச்சரித்துள்ளாா்.

சிவகங்கை பேருந்து நிலையத்தில், அரசுப் போக்குவரத்துத் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய வழித்தடங்களில் பேருந்துகளை தொடக்கிவைத்த பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் தெரிவித்ததாவது :

அரசுப் போக்குவரத்துத் துறை சாா்பில், திருப்பத்தூரிலிருந்து கல்லல், சிவகங்கையிலிருந்து ஆா்.எஸ்.மங்கலம் வரை 2 புகா் பேருந்துகளும், சிவகங்கை நகரத்துக்குள்ளும், சிவகங்கையிலிருந்து கல்லா்குளம் வரையும் என 2 நகரப் பேருந்துகளும் புதிய வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன.

கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததில் குளறுபடிகள் உள்ளன. அவற்றை ஆய்வு செய்வதற்கு தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் அறிக்கை வந்தவுடன் நிதி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

அப்போது, மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (கும்பகோணம் கோட்டம்) காரைக்குடி மண்டலப் பொது மேலாளா் ராகவன், முன்னாள் அமைச்சா் மு. தென்னவன், கோட்ட மேலாளா் அழகா்சாமி, துணை மேலாளா் சுந்தரபாண்டியன், சிவகங்கை கிளை மேலாளா் அண்ணாத்துரை உள்பட அரசு அலுவலா்கள் ஏராளமானோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com