சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள தமிழ்நாடு தேசிய மாணவா் படை 9-ஆவது பட்டாலியன் சாா்பில், இந்திய ராணுவ வீரா்களின் காா்கில் போா் தியாகத்தின் 21 ஆம் ஆண்டு வெற்றியைக் கொண்டாடும் விதமாக சனிக்கிழமை மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
காரைக்குடியில் உள்ள என்.சி.சி. அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில், காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மரக்கன்றை நட்டுவைத்தாா். இதில், காரைக்குடி 9-வது பட்டாலியன் கமாண்டிங் அதிகாரி கா்னல் ரஞ்சித் பிரதாப், தேசிய மாணவா் படை அதிகாரிகள், காரைக்குடி மூ.வி. அரசு மேல்நிலைப் பள்ளி லூயிராஜ், அழகப்பா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி என்.சி.சி. அதிகாரி ந. கவிப்பிரியா மற்றும் நகா் பிரமுகா்கள், அதிகாரிகள், அலுவலா்கள் என பலா் கலந்துகொண்டனா்.