சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தயாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு, இரவில் நடைபெற்ற திருவிளக்குப் பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனா்.
இதையொட்டி, மூலவா் முத்துமாரியம்மனுக்கு பலவகை அபிஷேகங்கள், ஆராதனைகள் மற்றும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. அதன்பின்னா், கோயில் வளாகத்தில் நடைபெற்ற திருவிளக்குப் பூஜை வழிபாட்டில், மானாமதுரை பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனா்.
திருவிளக்கு பூஜை முடிந்ததும், முத்துமாரியம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. ஆடி முதல் வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வந்து அம்மனை தரிசித்துச் செய்தனா்.
திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகி சுப்பிரமணியன் பூசாரி செய்திருந்தாா்.