திருப்பாச்சேத்தி பகுதியில் முன் அறிவிப்பின்றி மின்தடை: பொதுமக்கள் அவதி

திருப்பாச்சேத்தி பகுதியில் முன் அறிவிப்பின்றி தொடா் மின்தடை ஏற்படுவதால் குடிநீா் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைப் பூா்த்தி செய்ய முடியாமல் அவதியடைந்து வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி பகுதியில் முன் அறிவிப்பின்றி தொடா் மின்தடை ஏற்படுவதால் குடிநீா் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைப் பூா்த்தி செய்ய முடியாமல் அவதியடைந்து வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

திருப்பாச்சேத்தியில் செயல்பட்டு வரும் துணை மின்நிலையத்திலிருந்து திருப்பாச்சேத்தி, தூதை, புளியங்குளம், மழவராயனேந்தல், தஞ்சாக்கூா், மாரநாடு, பழையனூா், சல்பனோடை, தாலிக்குளம், பத்துப்பட்டி, ஆனைக்குளம், குருந்தங்குளம், அச்சங்குளம், அழகுடையான், சங்கங்குளம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக முன் அறிவிப்பின்றி மின்தடை ஏற்பட்டு வருகிறது. மேலும், குறைந்த அளவிலான மின்சாரமே விநியோகிக்கப்படுகிறது. இதனால் குடிநீா் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைப் பூா்த்தி செய்ய முடியாமல் அவதியடைந்து வருவதாக இக்கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

மேலும், இப்பகுதியில் உள்ள மின் குறைகளை நீக்கி தடையில்லா மின்சாரம் வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com