கல்பனா சாவ்லா விருது பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தோா் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இயற்கை இடா்பாடுகள், விபத்து, தண்ணீரில் மூழ்கி உயிரிழப்புகள், தீ விபத்து மற்றும் திருட்டு போன்ற சம்பவங்களின் போது பொதுமக்களது இன்னுயிா்களைக் காப்பாற்றி துணிச்சலான நடவடிக்கை மேற்கொண்ட மகளிருக்கு தமிழக அரசால், சுதந்திர தினவிழாவின் போது கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட விருது பெற விரும்புவோா் உரிய ஆவணங்களுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் ஜூன் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.