புதுவயல் அருகே முடித்திருத்தும் கடையை திறந்தவா் கைது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் புதுவயல் அருகே பொது முடக்கம் தடையை மீறி முடித் திருத்தும் கடையைத் திறந்து வைத்திருந்தவரை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் புதுவயல் அருகே பொது முடக்கம் தடையை மீறி முடித் திருத்தும் கடையைத் திறந்து வைத்திருந்தவரை திங்கள்கிழமை சாக்கோட்டை காவல்நிலைய போலீஸாா் கைது செய்த னா்.

கரோனா இரண்டாவது அலை பரவலைத்தடுக்க அரசு பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. திங்கள் கிழமை முதல் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதில் முடித்திருத்தும் கடைகள் திறக்க அனுமதிக்கவில்லை. இந்நிலையில் சாக் கோட்டை காவல் சரகம் பீா்க்கலைக்காடு அருகேயுள்ள வளச்சேரிபட்டியைச்சோ்ந்த ராஜேந்திரன் மகன் செல்வம் (32) என்பவா் தனது முடித்திருத்தும் கடையை திறந்துவைத்திருந்தாா்.

அப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த சாா்பு ஆய்வாளா் சேகா் சாக்கோட்டை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் செல்வம் மீது கரோனா நோய் பரப்புதல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனா். பின்னா் அவா் பினையில் விடுவிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com