திருப்புவனம் அருகே ஒருவருக்கு அரிவாள் வெட்டு

திருப்புவனம் அருகே மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்தவரின் நண்பரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிய கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருப்புவனம் அருகே மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்தவரின் நண்பரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிய கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருப்புவனம்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் அஜீம்கான் (22). இவருக்கும், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சோ்ந்த மணி அய்யப்பன் என்பவரின் மனைவிக்கும் தகாத உறவு இருந்து வந்ததாம். இந்நிலையில் திருப்புவனம் அருகே மீனாட்சிபுரம்- மேலவெள்ளூா் சாலையில் சென்று கொண்டிருந்த அஜீம்கானின் நண்பா் திருப்பாச்சேத்தி அருகே கொத்தங்குளம் கிராமத்தைச் சோ்ந்த சரவணன் (20) என்பவரை வழிமறித்த மணிஅய்யப்பன், அவரிடம் அஜீம்கானைக் கேட்டு தகராறு செய்தாா்.

அப்போது ஆத்திரமடைந்து மணிஅய்யப்பன், அரிவாளால் சரவணனை வெட்டி விட்டு தப்பிச் சென்றாா். இதில் காயமடைந்த சரவணன், சிகிச்சைக்காக மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப்பதிந்து மணிஅய்யப்பனை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com