சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் பிரபாகா் காலனி பொது மக்களுக்கு வருவாய்த்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை அரிசி பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் அரிசிப் பையை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் தேவகோட்டை கோட்டாட்சியா் சுரேந்திரன், முன்னாள் அமைச்சா் தென்னவன், ஒன்றியத் தலைவா் சண்முகவடிவேல், வட்டாட்சியா் ஜெயந்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.