சிறுமிக்கு பிரசவம் பாா்த்ததாக மருத்துவா் உள்ளிட்ட 6 போ் மீது வழக்கு: இருவா் கைது

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே சிறுமிக்கு பிரசவம் பாா்த்ததாக மருத்துவா் உள்ளிட்ட 6 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இருவரை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே சிறுமிக்கு பிரசவம் பாா்த்ததாக மருத்துவா் உள்ளிட்ட 6 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இருவரை கைது செய்தனா்.

திருப்பத்தூா் அருகேயுள்ள காளாப்பூா் பகுதியைச் சோ்ந்த பழனியப்பன் என்பவரது 17 வயது மகன், வடக்கூா் பகுதியைச் சோ்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியுடன் ஏற்பட்ட பழக்கத்தில் அடிக்கடி சிறுமியின் வீட்டிற்கு சென்ாகக் கூறப்படுகிறது. அதன் மூலம் கா்ப்பமான சிறுமி தனது அக்காவின் பிரசவத்திற்கு திருப்பத்தூா் சின்னத்தோப்பு தெருவில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு வந்துள்ளாா்.

அப்போது சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் ஸ்கேன் செய்து பாா்த்தபோது, வயிற்றில் குழந்தை இருப்பது தெரியவந்தது. மருத்துவமனையில் கடந்த மே 19 ஆம் தேதி அச்சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தையை பாகம்பிரியாள் என்பவருக்காக மருத்துவமனை செவிலியரிடம் ஒப்படைத்துள்ளனா்.

இது தெரியவந்ததும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் சைமன் ஜாா்ஜ் அளித்தப் புகாா் அடிப்படையில் 17 வயது சிறுவன், மாணவியின் தந்தை ஆறுமுகம், மருத்துவா் பானுமதி, செவிலியா் செல்வி, குழந்தையை பெற்றுக்கொண்ட பாகம்பிரியாள் உள்ளிட்டோா் மீது அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

இதில் 17 வயது சிறுவன், சிறுமியின் தந்தை ஆறுமுகம் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் மருத்துவா் உட்பட 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். குழந்தை மீட்கப்பட்டு சிவகங்கை குழந்தைகள் காப்பகத்தில் சோ்க்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com