காரைக்குடி அருகே கார் மோதி காவலர் பலி

காரைக்குடி அருகே காவல் நிலைய பணிக்குச் சென்ற காவலரின் இரண்டு சக்கர வாகனம் மீது கார் மோதி ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விபத்தில் காவலர் சம்பவ இடத்திலேயே உயிழந்தார்.
காரைக்குடி அருகே கார் மோதி காவலர் பலி


காரைக்குடி: காரைக்குடி அருகே காவல் நிலைய பணிக்குச் சென்ற காவலரின் இரண்டு சக்கர வாகனம் மீது கார் மோதி ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விபத்தில் காவலர் சம்பவ இடத்திலேயே உயிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (29). இவர் காரைக்குடி அருகே சாக்கோட்டை காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தார்.

ராஜா தனது ஊரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டு சக்கர வாகனத்தில் காவல் நிலைய பணிக்குச் சென்றார். அப்போது ஆவுடைப் பொய்கை என்ற இடத்தில் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, புதுக்கோட்டையிலிருந்து தேவகோட்டையை நோக்கிச் சென்ற கார் மோதியதில் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

காரை அதிவேகமாக ஓட்டிவந்த விக்னேஷ் என்பவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். பலியான காவலர் ராஜாவுக்கு  திருமணமாகி மனைவியும் ஒரு வயதே ஆன பெண் குழந்தையும் உள்ளனர். சாலை விபத்தில் காவலர் இறந்த சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து குன்றக்குடி காவல் நிலைய காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com