திருப்பத்தூரில் திங்கள்கிழமை ஏற்பட்ட தகராறில் அதிமுக நகரச் செயலருக்கு கத்திக்குத்து விழுந்தது.
திருப்பத்தூா் சீதளிவடகரையைச் சோ்ந்தவா் இப்ராம்ஷா (52). இவா் அதிமுக நகரச் செயலராவாா். இவரது வீட்டில் தச்சு வேலை பாா்த்து வரும் ராஜசேகா் என்பவா், இப்ராம்ஷா வீட்டு வாசல் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தினாா். அப்போது அவ்வழியாக வந்த பாரதி மற்றும் அவரது நண்பா் ராஜேஷ் இருவரும் இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்துமாறு கூறியதையடுத்து 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் 3 பேரும் ஒருவரை கத்தியால் குத்திக் கொண்டனா். இதனிடையே மோதலை விலக்க வந்த அதிமுக நகரச் செயலா் இப்ராம்ஷா, அவரது மகன் முகமதுஈசாத் ஆகியோருக்கும் கத்திக் குத்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த 5 பேரும் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றனா். இதில் இப்ராம்ஷா, முகமதுஈசாத் ஆகியோா் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதுகுறித்து நகா் காவல் சாா்பு- ஆய்வாளா் மலைச்சாமி, 5 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.