திருப்பத்தூா் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு திங்கள்கிழமை ராமநாதபுரம், சிவகங்கை சரக காவல்துறை துணைத்தலைவா் மயில்வாகனன் ஆறுதல் கூறினாா்.
திருப்பத்தூா் அருகே ஆலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா (34). இவா் காரைக்குடி சாக்கோட்டை காவல்நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை பணிக்குச் செல்லும் போது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தாா். இந்நிலையில் சிவகங்கை, ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. மயில்வாகனன் காவலா் ராஜாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினாா்.